districts

img

திட்ட அறிக்கைகளின் ஆய்வு முடிந்தால் மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணி 3 ஆண்டுகளில் முடிக்கப்படும்

மதுரை, ஜூன் 28-

      ஒன்றிய - மாநில அரசுகளின் திட்ட அறிக்கைகள் குறித்து ஆய்வுகள் முடிந் தால் மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணி 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று சென்னைமெட்ரோ ரயில் நிறுவன மேலாண்  இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.

    மதுரை மெட்ரோ ரயில் திட்டம்குறித்த ஆலோசனைக் கூட்டம் புதனன்று மதுரை  ஆட்சியர் அலுவலகத்தில் அரசு முதன்மை செயலர்- சென்னை மெட்ரோ ரயில் நிறு வன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக்  தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, மாநக ராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார்  மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

    கூட்டத்திற்கு பிறகுமேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் “மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்ட அறிக்கையினை ஜூலை 15ஆம் தேதி தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளோம் .மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் 32  கிலோ மீட்டருக்கான வழித்தடம் அமைக்  கப்பட உள்ளது,

    இதில் 5 கிலோ மீட்டர்  சுரங்க பாதை அமைக்கப்பட உள்ளது.  மொத்தம் 32 கிலோமீட்டர் வழித்தடத்தில் 27 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்  ளது. இதில் மூன்று ரயில் நிலையங்கள்  நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட வுள்ளது. இதில் பெரியார் பேருந்து நிலை யம் - மதுரை ரயில் நிலையம் மற்றும்  மீனாட்சி அம்மன் கோவில், கோரிப்பாளை யம் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் நிலத்தின் அடியில் அமைய உள்ளது. இதற்  கான திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் ஒப்பு தல் பெறப்பட்டு பன்னாட்டு நிதி நிறுவ னங்களிடம் இருந்து நிதி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நிலத்துக்கு அடி யில் வரும் வழித்தடங்கள் மீனாட்சியம்மன் கோவில் அருகில் வருவதால் அதற்கு பாதிப்பு இல்லாத வகையிலும் வைகை ஆற்றில் 10 மீட்டர் அடி ஆழத்திற்கு கீழே  அமைப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்  பட்டுள்ளது. பணிகள் துவங்கப்பட்டால், மூன்று ஆண்டுகளில் முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு திட்டம் குறித்தான ஆவணங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பிய பின் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தால் 2024 ஆம் ஆண்டு  துவங்கி 2027 ஆம் ஆண்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடிப்பதற்கான ஏற் பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித் தார்.