திருச்சிராப்பள்ளி, ஜன. 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட 23 ஆவது மாநாடு செந்தொண் டர் பேரணியுடன் தொடங்கி எடமலைப்பட்டி புதூர் தம்பியப்பா திருமண மஹாலில் தோழர் கே.வரதராஜன் நினைவரங்கத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடை பெற்றது. மாநாட்டை மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடங்கி வைத்து பேசிய தாவது: இன்றைய அரசியல் கடந்த கால அரசி யலை விட கடினமானது. புதிய சவால்களை சந்திக்கும் நிலையில் இன்றைய மார்க்சியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரி இயக்கங்கள் உள்ளன. ஆர்எஸ்எஸ் சொல்வதை தான் பாஜக கேட்கும். ஆர்எஸ்எஸ் தத்துவம் இத்துமத ஆட்சியை உருவாக்குவது, மத அரசாங்கத்தை உரு வாக்குவது.
இந்த நாடு மதச்சார்பற்ற நாடு அல்ல என்பது அவர்களது கருத்து. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்பது இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஏன்னென்றால் இது மதச்சார்பற்ற அரசியல் சட்டம். பொருளாதார ரீதியாக வரக்கூடிய மாற்றங்கள் சாமானிய மக்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும். பொதுத் துறைகளை தனியார் துறைகளாக மாற்றும் போது இட ஓதுக்கீடு என்பது ஏட்டளவில்தான் இருக் கும். இதை எதிர்த்து போராடும் மிக முக்கிய பணி இந்த காலக்கட்டத்தில் நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில், 80 வயதிலும் இடையறாத எழுத்துப்பணியில் ஈடுபட்டு வரும் எழுத்தா ளர் தோழர் இலக்குவன் மற்றும் மூத்த தோழர் கீழப்புதூர் ஆனந்தன் ஆகியோரது பணிகளை பாராட்டி டி.கே.ரங்கராஜன் கௌரவித்தார். வேலை அறிக்கையை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா முன்மொழிந்தார். வரவு – செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ரெங்கராஜன் சமர்ப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வ சிங் நிறைவுரையாற்றினார். முடிவில் வர வேற்புக்குழு செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.