திருச்சி, மே 16-
திருச்சியில் தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவ டிக்கை குழு சார்பில் தமிழ் நாடு சார்பதிவாளர் சங்கம், பதிவுத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம், பதிவுத் துறை அலுவலக உதவி யாளர்கள் மற்றும் அடிப் படை பணியாளர் சங்கம் ஆகி யவற்றின் கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சார்பதி வாளர் சங்க மாநிலத் தலை வர் மகேஷ், பதிவுத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் வீரக் குமார், பதிவுத்துறை அலுவ லக உதவியாளர், அடிப் படை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாஸ்க ரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனை வர். பால்பாண்டி, தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் டேனியல் ஜெயசிங் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினர்.
சார்பதிவாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் மணிராஜ் நிறைவுரையாற்றி னார். சார்பதிவாளர் பாண்டி செல்வம் வரவேற்றார். சார்பதிவாளர் சங்க திருச்சி மண்டலப் பொருளாளர் செந்தில்குமரன் நன்றி கூறினார். கூட்டத்தில், மே 31 ஆம் தேதிக்குள் பிஏசிஎல் உள் ளிட்ட தற்காலிக பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் உடன டியாக பணியில் அமர்த்தல், பதிவு சட்டப்பிரிவு 22, 22 ஏ 2 க்கான தெளிவுரை வழங்கு தல், சனிக்கிழமை வேலை நாள் ரத்து செய்தல், பொது பணியிட மாறுதல், தகுதி காண் பருவம் நிறைவு செய்த ஆணை பிறப்பித்தல், இளநிலை உதவியாளர் நிலையிலிருந்து உதவியா ளர் பதவி உயர்வு ஆணை பிறப்பித்தல், மூன்றாம் மொழி தேர்வினை ரத்து செய்தல், சட்டப்பூர்வ பணி யினை செய்யும் அலுவலர் கள் மீது எப்ஐஆர் பதிவு செய்வதை தடுக்க கோரி ஏற்கனவே உள்ள ஆணை யினை டிஜிபி அவர்களுக்கு மீண்டும் பரிந்துரைத்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தராவிட்டால் தற்செயல் விடுப்பு போராட் டம் நடத்த கூட்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.