திருவாரூர், ஜன.30 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், திருவாரூர் நக ராட்சியில் நடைபெற்ற மனித நேய வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் மனித நேய வார விழா கொண்டா டப்பட்டு வருகிறது. அதன் படி, இந்த ஆண்டு ஜன.24 முதல் 29 வரை கொண்டாடப் பட்டது. மனித நேய வார விழாவையொட்டி விழிப்பு ணர்வு பேரணி, சமபந்தி போ ஜனம், அனைத்து மத தலை வர்களையும், ஆதிதிராவிடர் சான்றோர்களையும் ஒன்று கூட்டி நல்லிணக்கக் கூட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டக் கூறுகள் குறித்து காவல்துறை, வழக்கறி ஞர்கள், நீதிபதிகள் பங் கேற்ற கருத்தரங்கம், வில்லுப் பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜன.29 அன்று நிறைவு நாள் நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்களுக்கிடையே நடை பெற்ற பல்வேறு போட்டி களில் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பரிசுகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முக நாதன், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலு வலர் அமுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கலந்து கொண்டனர்.