அன்பில் அறக்கட்டளை சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனையில் உள் மற்றும் புற நோயாளிகளுக்கான தினசரி காலை உணவுத் திட்டத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துச்செல்வம், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உட்பட பலர் பங்கேற்றனர்.