districts

திருச்சி முக்கிய செய்திகள்

1,100 கிலோ ரேஷன் அரிசி  பதுக்கல்: ஒருவர் கைது

தஞ்சாவூர், ஆக.8 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்த நபரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, திருச்சிற்றம் பலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினர் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.  இதில், திருச்சிற்றம்பலத்திலுள்ள ஒரு வீட்டில் தலா 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் 1,100 கிலோ  ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அப்பகுதி யில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மீன்  பண்ணைகளுக்கு அதிக விலையில் விற்கப்படுவதும்  தெரிய வந்தது. இது தொடர்பாக திருச்சிற்றம்பலம் சந்தை  சாலையைச்சேர்ந்த கணேசன் (47) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

புனித அலங்கார அன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கும்பகோணம், ஆக.8- கும்பகோணம்  புனித அலங்கார அன்னை பேரால யத்தில்  இவ்வாண்டு தொடக்க விழாவாக ஆலயத்தின் முன்புறம் அமைக்கப்பட்ட ஆலயக் கொடிமரத்தில்  கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவை குடந்தை முன்னாள் ஆயர் அந்தோணி சாமியால் புனிதப் படுத்தப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றமும் தொடர்ந்து  திருப்பலி மறையுறை ஆகியவற்றுடன் ஆண்டு திருவிழா  தொடங்கியது. இதில் திரளான கிருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வாக வரும் 14ஆம் தேதி மாலை குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் தலைமையில் திருப்பலி மறையுறை ,இரவு   புனித அலங்கார அன்னையின் ஆடம்பர திருத்தேர் பவனி முக்கிய வீதிகளில் நடக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் பேச்சுத்தமிழ்,  தமிழ் அர்ச்சனைப் பயிற்சிப் படிப்புகள் தமிழ்ப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஆக.8 -  தென்னாப்பிரிக்காவில் லட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும், அங்கே பேச்சு வழக்கில் தமிழ் புழங்காத நிலையே உள்ளது. இச்சூழலில் தமிழை மீட்டெடுக்கும் வகையில் அந் நாட்டில் உள்ள தென்னாப்பிரிக்கத் தமிழ் வர்த்தக சங்கம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ் வளர் மையத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற் கொண்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் தென்னாப்பிரிக்கத் தமிழ் வர்த்தக சபைத் தலைவரான சிவப்பிரகாசன் பிரெகி பிள்ளை, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.  இதில், தென்னாப்பிரிக்காவில் தமிழ் அர்ச்சனைகளை செய்வ தற்கான சான்றிதழ் படிப்பு, பேச்சுத் தமிழ் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்புகளைத் தமிழ் வளர் மையம் மூலம் நடத்திடும் திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில், இலங்கையில் உள்ள மலையகத் தமிழர் பகுதிக ளில் தமிழ்க்கல்வியை மையமிட்ட சான்றிதழ், பட்டயப்படிப்புகளை எஸ்.எஸ்.எம் கல்வி நிறுவனம் மூலமாக நேரடியாக நடத்திடுவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்க ளுக்கான பாடத் திட்டங்களைத் தமிழ் வளர் மையத்தின் இயக்கு நர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் வடிவமைத்து வருவதாகக் குறிப்பிட்ட தமிழ்ப் பல்கலைக்கழ கத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன், பேச்சுத்தமிழை மீட்டெடுத்திடும் தென்னாப்பிரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் முயற்சிக்கு இப் படிப்புகள் பெரும் உதவி யினை நல்கும் என்று தெரிவித்தார்.  மேலும், இலங்கை மலைய கத் தமிழர்களுக்கு சிறப்பம்சங்களு டன் கூடிய வகையில் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையிலான படிப்புகளைத் தமிழ்ப் பல் கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையம் முன்னெடுக்கவும் இந்த ஒப்பந்தம் வழி வகை செய்வதாக துணைவேந்தர் குறிப்பிட்டார். தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பதிவாளரும் பேராசிரி யருமான முனைவர் கு.வெ.பாலசுப்ரமணியன், இலங்கை எஸ்.எஸ்.எம் கல்வி நிறுவனச் செயலர்  கவாலியர் எஸ்.எஸ். மதிவாணன்,பேராசிரியர் மஞ்சுளா,  முனைவர் சங்கரராமன், முனைவர் ராஜா மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் பிரிவின் கண்காணிப்பா ளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்படிப்புகள் இருநாடுகளிலும் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளன. 

மருதுபாண்டியர் கல்லூரியில்  நாட்டுநலப்பணித் துவக்க விழா

தஞ்சாவூர், ஆக.8 -  தஞ்சாவூர், மருதுபாண்டி யர் கல்லூரியில், நாட்டு நலப் பணித்திட்ட துவக்க விழா புதன் கிழமை நடைபெற்றது.  இதில் கல்வி நிறுவனங்க ளின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித் தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ந.சந்தோஷ்குமார்  வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணைமுதல்வர் இரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.   திருச்சிராப்பள்ளி பாரதிதா சன் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பா ளர் பி.இராமஜெயம், மன்னார் குடி இராஜகோபாலசாமி அரசு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.பிரபாகரன் ஆகியோர், நாட்டு நலப்பணித்திட்ட முகாமை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினர்.  நிறைவாக, நாட்டு நலப்பணி த்திட்ட (அலகு - 2) அலுவலர் து.பூங்குயில் நன்றி கூறினார்.  விழாவில் 100 க்கும் மேற் பட்ட முதலாமாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். தமிழ்த் துறைப்பேராசிரியர் உஷா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி மேலா ளர் இரா.கண்ணன் செய்தி ருந்தார்.

தீக்கதிர் செய்தி எதிரொலி  வகுப்பறை கட்டடம் திறப்பு

பாபநாசம், ஆக. 9-   பாபநாசம் வித்யா பாட சாலை (எ) பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு  ஏற்ப போதுமான வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 8ஆம் வகுப்பறை கட்டடம் கட்டி முடித்து இரண்டு மாதங்களைக் கடந்த பின்னரும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் வகுப்பறை வளாகத்தில் கல்வி பயிலும் அவல நிலை குறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது.  இதைத் தொடர்ந்து புதனன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யா மொழி எட்டாம் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பால கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவி சுமதி, பாபநாசம் பேரூ ராட்சி தலைவி பூங்குழலி, திமுக பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆக. 28இல் வாராப்பூரில் மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 8-  புதுக்கோட்டை வட்டம் வாராப்பூர் சரகம், வடவாளம் வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 28 ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஆக.9) முதல் பொதுமக்களிடமிருந்து முன்மனுக்கள் வடவாளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பெறவுள்ளதால் பொது மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம்தெரிவித்துள்ளது.

மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்

புதுக்கோட்டை ஆக.8-  “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் வெள்ளியன்று முகாம்கள் நடைபெற உள்ளன. இதுகுறித்து புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர்மு.அருணா தெரிவித்திருப்ப தாவது: திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருவரங்குளம் அம்பாள் திருமண மண்டபத்தில் கொத்தகோட்டை, கோவிலூர், திருக்கட்டளை, திருவரங்குளம், வேப்பன்குடி ஆகிய ஊராட்சிகளுக்கும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றி யம் நெற்குப்பை, அம்பலவானேந்தல் யோகம் திருமண மஹாலில் மணலூர், மின்னாமொழி, நெற்குப்பை, நெல்வேலி, கோலேந்திரம், பெருமருதூர், கானாடு, கீழமஞ்சக்குடி, சட்டியடி, செய்யாணம், வேலூர் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது. விராலிமலை ஊராட்சி ஒன்றியம் கொடும்பாளூர், நந்தி கோவில் அருகில் உள்ள மைதானத்தில் கொடும்பாளூர், தென்னத்திரையான்பட்டி,கசவனூர், அகரப்பட்டி, மீனவேலி, பொய்யாமணி, தேராவூர் ஆகிய ஊராட்சிக ளுக்கும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைஅளித்து பயன்பெறலாம்.

பாதுகாப்பு இல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பருத்தி சேரி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டை நாசமானதை அடுத்து நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.     தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட பருத்திச் சேரி கிராமத்தை சுற்றி செண்பகக்கொல்லை, திருமயம், கீரனூர் உள்ளிட்ட கிராமங்க ளில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களை பயன்படுத்தி விவசாயிகள் விவசா யம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் பெற்று முப்போக சாகுபடியிலும் நெல் பயிரிட்டனர்  அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் அருகில் உள்ள பருத்திச்சேரி அரசு நெல் கொள்முதல் நிலை யத்தில் கொள்முதல் செய்தனர் .ஆனால் பருத்திச் சேரி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை திறந்தவெளியில் வைத்துள்ளனர். இந்நிலையில் புதன் அன்று பெய்த  மழையில் கொள்முதல் செய்யப் பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்காமலும் அலட்சியப் போக்கில் அதிகாரி கள் நடந்து கொண்டதன் விளைவாகவும்  விவசாயிகளிடம் பெற்ற சுமார் 200  நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் ஆகின.  இதனால்  கொள்முதல் செய்யப்பட்ட நெல் ,அரசிற்கு நஷ்டத்தையும் உணவு தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே பருத்திச் சேரி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பற்ற முறையில் அலட்சி யப் போக்கில் நடந்து கொண்ட அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுத்து துரிதமாக பருத்திச்சேரி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல் மூட்டை களை பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார். 

ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை, ஆக.8-  புதுக்கோட்டை மாவட்டம்ரூபவ் திருவரங்குளம் ஒன்றியப் பகுதிகளில் சுற்றுச்சூழல்து றை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை ரூ 6.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். திருக்கட்டளை ஊராட்சியில்  ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதி தாகக் கட்டப்பட்டுள்ள பகுதிநேர அங்காடி கட்டிடம், அரசடிப்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ .12.70 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பாத்தம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 7 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அரையப்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் மாங்கனாம்பட்டி ஊராட்சியில் ரூ 30 லட்சம் மதிப் பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடப் பணி, திருவரங்குளம் ஊராட்சியில் ரூ 5.30 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணி, கே.வி.கோட்டை ஊராட்சியில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப் படவுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடப் பணி ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.