தஞ்சாவூர், மே.2 - உழைக்கும் தொழிலாளர்களின் ஒப்பற்ற தினமான மே தினம் காவிரி டெல்டா மாவட்டங்களில் எழுச்சிகர மாக கொண்டாடப்பட்டது. சிபிஎம், சிஐடியு சங்கங்கள் சார்பில் பல்வேறு மையங்களில் செங்கொடி யேற்றி,பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர், கணபதி நகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில், கட்சிக் கொடியினை, சிபிஎம் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், சிஐடியு கொடியை மூத்த தோழர் என்.சீனிவா சன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.200-க்கும் மேற்பட்ட மையங்களில் கொடி யேற்றப்பட்டது.
கும்பகோணம்
கும்பகோணம் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது. சிஐடியு மாவட்ட தலை வர் ம. கண்ணன் தலைமை வகித்தார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாநகரில் 196 இடங்களில் சிஐடியு கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர். தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சிஐடியு, ஏஐடியுசி சார்பில் மாலை பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகே நடந்த மே தின பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலை வர்கள் சிஐடியு சீனிவாசன், ஏஐடியுசி நடராஜா ஆகியோர் தலைமை வகித்த னர். சிஐடியு மாநில துணை பொ துச்செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், ஏஐடியுசி மாநில தலைவர் காசிவிஸ்வநாதன், மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகி யோர் உரையாற்றினர். சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் செல்வி வர வேற்றார். முடிவில் ஏஐடியுசி அன்சர்தீன் நன்றி கூறினார். திருச்சி புறநகர் 36 மையங்களில் மேதின கொடியேற்ற விழா நடந்தது. மணப்பாறையில் மூத்த தோழர் டி.எம். ஜக்கரியாவின் இல்லத்தில் அவரது பேத்தி ஆசிபா செங்கொ டியை ஏற்றினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பிலும், சிஐடியு தொழிற்சங்கம் சார்பிலும் புதன் கிழமை செங்கொடிகளை ஏற்றி, இனிப்புகள் வழங்கி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சிக் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா கட்சிக் கொடியை எற்றினார். கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் அறந்தாங்கி கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார். மேலும், அறந்தாங்கி நகரத்தின் பல்வேறு இடங்களிலும் செங்கொடி ஏற்றப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றி யங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், சிஐடியு தொழிற் சங்கங்களின் சார்பிலும் செங்கொடி ஏற்றி மேதின விழா கொண்டாடப் பட்டது.
மேதின பேரணி
புதுக்கோட்டையில் சிஐடியு, ஏஐடி யுசி தொழிற்சங்கங்களின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணி தொடங்கி, பொதுக்கூட்டம் நடைபெற்ற சாந்தநாதபுரத்தில் நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா, ஏஐடியுசி மாவட்டத் தலை வர் உ.அரசப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரணி-பொதுக்கூடத்தில் கலந்து கொண்டு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் எம்.செல்வ ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் ப. ஜீவானந்தம் ஆகியோர் உரையாற்றி னர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. சிஐடியு சார்பில் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியிலிருந்து பிரம்மாண்ட பேரணியை சிபிஎம் மாவட்ட செயலா ளர் பி.ரமேஷ் துவக்கி வைத்தார்.
காவல் உதவி ஆய்வாளர் வாக்குவாதம்
பேரணி துவங்கிய போது பாது காப்பு பணியில் இருந்த பெரம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் இரகுபதி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேரணி தாமதமானது. இதனை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக் கம் எழுப்பப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் நகராட்சியில் பணிபுரி யும் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பாக திருவாரூர் பேருந்து நிலை யம் அருகே இருந்து திருவாரூர் நக ராட்சி வரை மே தினப் பேரணி நடை பெற்றது. சங்கத்தின் கிளை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகை யன் கொடியேற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என்.அனிபா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டக்குழு அலுவல கத்தில் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி செங்கொடியேற்றி வைத்து உரையாற்றினார். திருத்துறைப்பூண்டி சிபிஎம் கட்சி அலுவலகத்தில் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கொடியேற்றினார். 100-க்கும் மேற்பட்ட மையங்களில் கொடியேற்றப்பட்டது.
மன்னார்குடி
மன்னார்குடி பந்தலடி பகுதியில் ஏஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் பொ துக்கூட்டம் நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் வி.கலைச்செல்வம், சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரெகுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஐ நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் உரையாற்றினார், சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி நிறைவுறையாற்றினார். சிஐடியு மாவட்ட யலாளர்டி.முருகையன், தலைவர் எம்.கே. என்.அனிபா, மாநில குழு உறுப்பினர் ஏ.பிரேமா மற்றும் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகரஆசாத், தலைவர் ஜெ.குணசேகரன் ஆகியோர் பேசினர்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் மே தின விழா சிஐடியு சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாவட்டம் முழுவதும் செங்கடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு செங்கொடியை ஏற்றிவைத்து சிறப்பு ரையாற்றினார். சிஐடியு கரூர் மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிஐடியு சங்க கொடியை சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் எம்.சுப்பிரமணியன் ஏற்றினார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்) சார்பில் மேதின விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் புதனன்று மாலை நடை பெற்றது. டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி அருகில் துவங்கிய பேரணிக்கு சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கலைச்செல் வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் து.இளவரசன் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினார். நகராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஜாக் தலைவர் இரா.இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நட ராஜன் , சிஐடியு மாவட்ட செயலாளர் ப.மாரியப்பன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் கொடியேற் றப்பட்டது.