districts

அண்ணாமலையின் செயல்பாடுகளை அவரது கட்சியே ஏற்கவில்லை

கே.எஸ்.அழகிரி சாடல் தஞ்சாவூர், ஏப்.17-  அண்ணாமலையின் செயல்பாடுகளை அவரது கட்சியே ஏற்றுக்கொள்ளவில்லை என தஞ்சாவூர் மாவட்  டம் அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறி னார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘சட்டத்திற்கு புறம்பாக பதவியை தவறாக பயன்படுத்தி சம்பாதித்தால் தான்  ஊழல். ஆனால், அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளி யிடுவதாக கூறி சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

 அண்ணாமலை சுய விளம்பரத்துக்காக இது போன்று  கூறி வருகிறார். ஆக்கப்பூர்வமான அரசியல் தான் வெற்றி  பெறும். இது போன்ற விளம்பர அரசியல் வெற்றி பெறாது.  அண்ணாமலையின் செயல்பாடுகளை அவரது கட்சியே  ஏற்றுக் கொள்ளவில்லை. புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு காரணம் பாஜக தான். ராணுவ வீரருக்காக விமானங்கள் கேட்ட போது, ஒன்றிய அரசு தர மறுத்து விட்டது. இத னால், 40 ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டனர்.  இதுகுறித்து பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் கூறிய போது, தன்னை அமைதியாக இருக்கச் சொல்லி விட்டதாக காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கருத்து கூறியுள்ளார்’’.

 இவ்வாறு அவர் தெரிவித்தார்.