திருச்சிராப்பள்ளி, நவ.9- இந்தி திணிப்புக்கு எதி ராக இந்திய மாணவர் சங் கத்தினர் வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு திருச்சி காட்டூர் பேருந்து நிலையத்தில் போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத் திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் சூர்யா, மாவட்ட செயலா ளர் ஜி.கே.மோகன், மாவட்ட துணை தலைவர் ஹரி ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரதாப், மாவட்ட குழு உறுப் பினர்கள் ஜெனி, செல்வகும ரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட் டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தலைவர் மணி பாரதி உரையாற்றினார். சங் கத்தின் கல்லூரி நிர்வாகி திவாகர் தலைமை போராட் டம் நடைபெற்றது.