districts

மனைவியை துன்புறுத்திய கணவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 13-  மனைவியை துன்புறுத்தி யதாக தொடரப்பட்ட வழக்  கில் ஆஜராகாதால் சென்  னையைச் சேர்ந்த மருத்துவர்  ஆசிக் அலிக்கு எதிராக லுக்  அவுட் நோட்டீஸ் வழங்கி  இந்தியா முழுவதும் நாளிதழ்  களில் விளம்பரப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை யைச் சேர்ந்த பெண் மருத்து வர் இர்பான நஸ்ரின் உயர்  நீதிமன்ற மதுரைக்கிளை யில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் : “எனக்கு  கடந்த ஆண்டு ஏப்ரல் 2021  ஆண்டு சென்னை சூளை மேடு பகுதியை சேர்ந்த மருத்  துவர் ஆசிக் அலி என்பவரு டன் மதுரையில் திருமணம் நடைபெற்றது. இந்த திரு மணத்திற்கு 200 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக எனது பெற்றோர் கொடுத்தனர். பின்னர் கணவரின் விருப்பப்படி சென்னையில் இருவரும் வசித்து வந் தோம். இந்நிலையில் எனது கணவர் யாரிடமும் தகவல் சொல்லாமல் தலாக் முறை யில் விவாகரத்து கூறிவிட்டு  அமெரிக்கா சென்று விட் டார்.  பாதிக்கப்பட்ட நான் தல்லாகுளம் காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்து முறையாக விசாரனை செய்யவில்லை. பின்னர் நீதிமன்ற வழக்கு தொட ர்ந்து, பிரிவு 417, 420 ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை 4 மாதங்களில் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு மதுரை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள கணவர் ஆசிக்அலி இது வரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. 5 முறை  சம்மன் அனுப்பப்பட்டுள் ளது. ஆனால் ஒரு முறை கூட சம்மன் பெறவில்லை. எனவே எனது கணவரை ஆஜர்படுத்தி வழக்கு விசா ரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த மனு மீதான விசா ரணை நீதிபதி சக்தி குமார் முன்பு செவ்வாயன்று நடை பெற்றது. இதில் நீதிபதி பிறப்பித்த  உத்தரவில், வழக்கில் ஆஜ ராக கணவருக்கு ஐந்து முறை சம்மன் அனுப்பியும் கதவு பூட்டப்பட்டுள்ளது என சம்மன் திரும்பியுள்ளது.வாட்ஸ்அப் மூலமாகவும் சம்மன் அனுப்பியும் எந்த  பதிலும் இல்லை .எனவே தல்லாகுளம் காவல் ஆய்வா ளர் சம்பந்தப்பட்ட நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் . லுக்  அவுட் நோட்டீசை இந்தியா முழுவதும் தினசரி பத்திரி கைகளில் விளம்பரம் வெளி யிட வேண்டும். அதில் 15  தினங்களுக்குள் சம்பந் தப்பட்ட நீதிமன்றத்தில் சரண்டர் அடைய வேண்டும் என தெரிவித்திருக்க வேண்  டும் என குறிப்பிட்ட நீதிபதி,  அவ்வாறு குற்றம்சாட்டப் பட்ட நபர் நீதிமன்றத்தில் சர ணடையாவிட்டால் நீதிபதி  இந்த வழக்கை தன்னிச்சை யாக நடத்தி உரிய தீர்ப்பு  வழங்கலாம். இந்த வழக்கில்  சம்பந்தப்பட்ட குற்றவாளி ஏற்கனவே ஜாமீன் பெற்  றுள்ளதால் முன் ஜாமீனை  ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்  டும். தவறும் பட்சத்தில் காவல் ஆய்வாளர் மீது மதுரை மாநகர காவல் துறை  ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்  தரவிட்டு முடித்து வைத் தார்.