districts

img

7 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் விரைவில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம்

தஞ்சாவூர், பிப்.2- தமிழகத்தில் 7 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் ஜூன் மாதத்தில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என தொடக் கக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் உள்ள நீலகிரி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உண வுத் திட்டத்தை வியாழக் கிழமை ஆய்வு செய்த  அவர் பின்னர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி களில் ஆய்வகங்கள் உள்ளன. ஆனால் நடு நிலைப் பள்ளிகளில் இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள  7 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் வருகிற கல்வியாண்டு முதல் தொ டங்கப்படவுள்ளது.  மேலும், 20 ஆயிரம் தொ டக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட்  வகுப்புகளும் தொடங்க நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணி கள் முடிவுற்று, ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும். தொடக்க, நடுநிலைப்  பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்து வதற்காக 80 ஆயிரம் ஆசிரி யர்களுக்கு இணைய தள வசதியுடன் கையடக்க  கணினியும் வழங்கப் படவுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் தரமான கல்வியை எளிதாக கற்பதற் கான வாய்ப்பு அமையும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.