பெரம்பலூர், பிப்.18- பெரம்பலூர் மாவட்டத்தில், மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் மூலமாக, மறுவாழ்வு நிதியுதவியின் கீழ் கறவை மாடுகளை திங்கள் கிழமை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கினர். மனம் திருந்திய 13 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.6.50 லட்சம் மதிப்பிலான கறவைமாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கினர்.