districts

img

தேனி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு சுருளி, கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி,டிச.13- தேனி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக வராக நதி ,வைகை, கொட்டகுடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .சுருளி அருவி ,கும்பக்கரை அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் . பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான சோத்துப் பாறை அணை வனப்பகுதி, கல்லாறு வனப் பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, செழும்பாறு வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வியாழ னன்று  பகல் மற்றும்  இரவிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பு ஆறு உள்ளிட்ட ஆறுகளில்  காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் அனைத்தும் ஒன்றிணைந்து  பெரியகுளம் வராக நதி ஆற்றில் செல்வதால் வராக நதி ஆற்றில்  வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெய மங்களம், மேல்மங்கலம், சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆற்றங்கரையோர பொதுமக்கள் பாதுகாப்பு டன் இருப்பதோடு  வராக நதி ஆற்றில் குளிக்க வோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அருவிகளில் குளிக்க தடை  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை யால் சுருளி அருவி , கும்பக்கரை அருவிக ளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள்  குளிக்க வனத்துறையினர்  தடை விதித்துள்ளனர் .  

                         பயணிகள் பாதுகாப்பு கருதி  அருவியில் குளிக்கவும்  அருவி பகுதிக்கு சென்று பார்க்க வும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மரம் விழுந்து  போக்குவரத்து பாதிப்பு குமுளி மலைப் பாதையில் இரைச்சல் பாலம் பழைய வருவாய் துறை போலீஸ் சோதனைச் சாவடிக்கு இடையில்  2 இடங்க ளில் மரங்கள் வேருடன் சாய்ந்து சாலை யின் குறுக்கே விழுந்தது. இதனால் சாலை யில் வாகனங்கள் போக முடியாமல் போக்கு வரத்துக்கு தடை ஏற்பட்டது குமுளியில் இருந்து கம்பம் நோக்கி வரும் வாகனங்க ளும், கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி செல்லும் வாகனங்களும் தடுத்து நிறுத்தப் பட்டன. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டது. மலைச்சாலையில்  பாறை உருண்டது  போடி மெட்டு மலைச் சாலையில் கொண்டை ஊசி வளைவில் 2 ராட்சத பாறை கள் உருண்டு விழுந்ததில் மலைச் சாலை யில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால் மூணாறு, கொச்சின், எர்ணாகுளம் உள்ளிட்ட கேரள பகுதிகளுக்கும் அங்கிருந்து தமிழகத்திற்குமான போக்குவரத்து பாதிப் படைந்தது. தகவல் அறிந்து விரைந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ராட்சத பாறை களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.   மலை கிராம மக்கள் அவதி  பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இத னால் சின்னூர் மலை கிராமத்திற்கு செல்லும் மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்ட தால் மலை கிராமத்தில் உள்ள அவர்களது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. கல்லாறு மற்றும் குப்பம்பாறை ஆறு இரண்டு ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால்  பத்து நாட்கள் முதல் 15 நாட்கள் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்படுவதா கவும், இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து மாத்திரை உள்ளிட்ட வைகள்  கொண்டு செல்ல முடியாத நிலையில் விளைந்த விளைபொருட்களை விற்பனை காக பெரியகுளம் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.