பொன்னமராவதி, ஏப்.25-
புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி தாலு காவில் வலையபட்டி பாப் பாயி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு போதிய வசதிகள், மருத்துவர்கள் நிய மித்து பொதுமக்களுக்கு போதுமான சிகிச்சைகள் கிடைக்க உரிய நடவடிக்கை கள் எடுக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் வெகுஜன அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தனி யார் மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொன்னமராவதிக்கு வருகை தந்த தமிழக சுகா தாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணினைச் சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொன்னம ராவதி ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையிலான தலைவர்கள், “ பொன்ன மராவதி வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவ மனைக்கு போதிய மருத்து வர்கள், பணியாளர்கள் மற்றும் போதிய மருத்துவ உபகரணங்கள் வேண்டும். இடிந்து விழும் நிலையில் இருக்கும் பொன்னமராவதி அமரகண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங் களை புதிதாக அமைத்துத் தர வேண்டும்.
காரையூர் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் நிய மிப்பதோடு, 108 ஆம்பு லன்ஸ் வசதி செய்து தர வேண்டும். கொப்பனாப்பட்டி மருத்துவமனைப் பணியா ளர்களின் தங்கும் விடுதியை சரி செய்து தர வேண்டும். பொன்னமராவதி ஒன்றி யத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதிய வசதிகள் செய்து தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். இது தொடர் பாக மனு ஒன்றையும் அமைச்சரிடம் அளித்தனர்.
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்ன மராவதியில் மீனாட்சி பெரி யண்ணன் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார். நிகழ்வில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகு பதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப் துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அறங்காவலர் பெரியண் ணன் செட்டியார் அனை வரையும் வரவேற்றார். ரத்னா பழனியப்பன் நன்றி கூறினார்.