districts

img

பாபநாசம் காப்பன்தெருவைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவருக்கு குழந்தைகள் இல்லை

பாபநாசம் காப்பன்தெருவைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவருக்கு குழந்தைகள் இல்லை. இவரது கணவர் கை, கால் செயலற்று படுக்கை நிலையில் உள்ளார். இவர், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டது குறித்து பாபநாசம் ரோட்டரி சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் மனோன்மணிக்கு தையல் இயந்திரம் வழங்கினர். இந்த தையல் இயந்திரத்தை பாபநாசம் காவல் துறை டி.எஸ்.பி பூரணி வழங்கினார். பாபநாசம் காவல்துறை ஆய்வாளர் அழகம்பாள், பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அன்பு சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் இருந்தனர்.