மதுரை, ஆக.20-
மதுரை தத்தனேரி பகு தியைச் சேர்ந்தவர் ராஜேந்தி ரன் (86). திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய் வத் தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூக நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், கூட்ட அரங் கம், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை தனது சொந்த நிதி 1 கோடியே 10 லட்சம் ரூபாயில் கட்டிக் கொடுத்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள புது மண்டபம் பழமை மாறா மல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்கு வதாகவும் கூறியுள்ளார். பேரிடர் காலங்களில் மக்க ளுக்கு உதவி செய்து வரு கிறார் முதியவர் ராஜேந்திரன்.
இவரது கல்வி மற்றும் பொதுச் சேவையினை பாராட்டும் விதமாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநக ராட்சி துணை மேயர் தி.நாக ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகி யோர் பாக்கியநாதபுரம் கே.டி.கே.தங்கமணி நகரில் உள்ள நிறுவனத்தில் நேரில் சந்தித்து முதியவர் ராஜேந்தி ரனுக்கு சால்வை அணி வித்து கௌரவித்தனர்.
இதில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஜா.நர சிம்மன், வடக்கு - 1 ஆம் பகு திக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராதா, முன்னாள் மாமன்ற உறுப்பி னர் பா.பழனியம்மாள், பகு திக்குழு உறுப்பினர்கள் பால சுப்ரமணியன், ஞானம் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அ. பாவேல் சிந்தன், பகுதிக்குழு செயலாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்த னர்.