மயிலாடுதுறை, பிப்.22- மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணிநேர வேலை, முழு கூலி வழங்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் திட்டம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் அஞ்சம்மாள், ஆனந்தன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.