மயிலாடுதுறை, செப்.9 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கிரா மங்களிலிருந்து வந்த மக்கள் ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 59 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 42 மனுக்களும், முதி யோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 33 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 42, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிக்கடன், மாற்றுத்திறனாளி உபகர ணங்கள் கோரி 11 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 25 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 21 மனுக்களும் கலைஞர் உரிமைத் தொகை வேண்டி 36 மனுக்களும், தொழிற்கடன் வழங்க கோரி 98 மனுக்களும் என மொத்தம் 367 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந் தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். பின்னர், வேளாண்மை துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் 10 விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பி லான மண்புழு உரப் படுக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.