தஞ்சாவூர், பிப்.25 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில், ஐந்தாவது பட்ட மளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பேராவூரணி சட்டப்பே ரவை உறுப்பினர் நா. அசோக்குமார், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் எம்.கிருஷ் ணன் ஆகியோர் பங்கேற்ற னர். மத்தியப் பல்கலைக் கழக துணைவேந்தர் கிருஷ் ணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் இளங்கலை யில் 305 மாணவர்கள், 738 மாணவிகள் என 1,043 பேருக் கும், முதுகலையில் 11 மாணவர்கள், 47 மாணவிகள் என 58 பேருக்கும் என மொத்தம் 1,101 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக தர வரிசை யில் சிறப்பிடம் பெற்றவர் களுக்கு பதக்கங்கள் வழங்கப் பட்டன. அனைத்து துறை தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.