மயிலாடுதுறை, ஏப்.2 - வேலம்புதுக்குடி கிராமத்தில் ஏழை குடும்பத்தின் நிலத்தை அபகரித்து வேலி அடைத்ததோடு, அக்குடும்பத்தினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது கட்டப் பஞ்சாயத்து கும்பல். இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கா மல், அராஜகத்திற்கு ஆதரவாக செயல்படும் பெரம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதனன்று போராட்டம் நடத்து கிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், வேலம் புதுக்குடி மாதாக்கோவில் தெரு வைச் சேர்ந்த சின்னப்பன். இவர் அதே பகுதியில் உள்ள நீலவெலி சாமியார் எஸ்டேட் பண்ணை என்ற தென்னார்காடு டயாசிஸ் நிறு வனத்தில் நிலங்களை பராமரிக் கும் தலையாரி வேலையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வந்துள் ளார். சின்னப்பனை தொ டர்ந்து அவரது மக னான ஞானமாணிக்கமும் தலையாரி வேலையை செய்து வந்ததையடுத்து, ஞான மாணிக்கம் குடும்பத்திற்கு சாமி யார் எஸ்டேட் நிர்வாகம், அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளனர். அந்நி லத்தில் ஞானமாணிக்கம் குடும்பத் தினர் பல ஆண்டுகளாக விவசா யம் செய்து பராமரித்து வருகின்ற னர். வேலி அமைப்பு - தாக்குதல் இந்நிலையில் அதேப் பகுதி யில் உள்ள சந்தி யாகு மற்றும் அவரது மகன் கள் மனோ கர், பிரபு என்ற பிரபா கரன் உள்ளி ட்டோர் அந்த நிலத்தை அத்துமீறி அபகரிக்க தொடர்ந்து முயன்று, கடந்த சனிக்கிழமை அந்நி லத்தில் அத்துமீறி வேலி அமைத் துள்ளனர். இதுகுறித்து கேட்ட ஞான மாணிக்கம் குடும்பத்தினரை அந்த மூவரும் தாக்கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் உட னடியாக பெரம்பூர் காவல் நிலை யத்திற்கு தகவல் அளித்துள்ள னர். ஆனால் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களோ, பாதிக் கப்பட்டு கைக் குழந்தையுடன் இருந்த பெண்கள் உள்ளிட் டோரை கைது செய்து வலுக் கட்டாயமாக காவல் நிலையத் திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மறியல் - காவல்துறை உறுதி காவல்துறையின் இத்தகைய அராஜகத்தை அறிந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவா சன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், டி.சிம்சன் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன், ஜி.வெண்ணிலா, சி.விஜய காந்த், கே.பி.மார்க்ஸ் உட்பட நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட் டம் நடத்தினர். இதையடுத்து குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுப்ப தாக காவல்துறையினர் உறுதி யளித்தனர். இதனால் நீண்ட நேரம் நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் தாக்குதல் தற்போது, திங்களன்று மீண்டும் நில அபகரிப்பு கும்பல் 10-க்கும் மேற்பட்டவர்களோடு ஞானமாணிக்கம் குடும்பத்தினர் மீது கும்பலாக சென்று தாக்குதல் நடத்தியுள்ளது. பெண்கள் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி கேவ லப்படுத்தியுள்ளனர். காயம டைந்த இரு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மயிலாடுதுறை அரசு மருத்து வமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், பெரம்பூர் காவல் நிலையத்தின் அராஜகத்தா லேயே இக்கொடுமை நடந்துள் ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பெரம்பூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர், கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். தாக்குதல் நடத்திய கும்பல் மற்றும் பெரம்பூர் காவல் துறை யினரை கண்டித்தும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கேட்டும், புதன் கிழமை (ஏப்.3) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் காவல் நிலை யத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தெரிவித்துள்ளார்.