தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சிறந்த விடுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி அரசு சீர்மரபினர் நலப் பள்ளி மாணவியர் விடுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பாராட்டு சான்றிதழ், பரிசுத் தொகை மற்றும் நினைவு பரிசு கேடயத்தை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, அப்பள்ளியின் மாணவியர் விடுதி காப்பாளினி கே.சந்தானலெட்சுமியிடம் வழங்கினார்.