கரூர், அக்.9 அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அரசு ஊழி யர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். பழைய ஓய்வு திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஊதியம், அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா செவ்வா யன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கே. இளங்கோ தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கோபி வர வேற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு.செல்வ ராணி, மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். பல்வேறு துறைவாரி சங்க மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்ட னர். மாவட்ட பொருளாளர் எல்.பால சுப்பிரமணி நன்றி கூறினார்.