districts

img

இடிந்து விழும் நிலையில் சுவாமிமலை அரசுப் பள்ளி கட்டிடம்: பெற்றோர் அச்சம்

கும்பகோணம் டிச.22 - தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் தாலுகா சுவாமி மலையில் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுவாமிமலை, அலவந்தி புரம், ஏரகரம், நாகக்குடி, திரு வைகாவூர், அண்டக்குடி உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் ஓடு போட்ட வகுப்பறையில் மாணவர்கள் படித்து வந்த னர். அதன் பின்னர் 20 ஆண்டு களுக்கு முன்பும் கடந்த சில வருடங்களுக்கு முன்பும் சிமெண்ட் கட்டிடமாக கட்டப் பட்டது. இந்நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனதால், மிகவும் ஆபத் தான நிலையில் காட்சியளிக் கிறது. வகுப்பறை மேற்கூரை கள், வகுப்பறைக்கு நடந்து செல்லும் பாதையில் உள்ள  மேற்கூரைகள் அனைத்தும் பெயர்ந்து சிமெண்ட் காரை கள் கீழே கொட்டுகின்றன. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.  மேலும் இருபாலரும் படித்து வருவதால் மாண வர்களுக்கு சுகாதார வளா கம் இல்லை. பள்ளி இடை வெளியில் பள்ளிக்கு அருகில்  உள்ள ஒதுக்குப்புறமான இடங்களில் தங்களது இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். சில  மாணவர்கள் வெளியில் செல்வதற்கு வெட்கப்பட்டு கொண்டு இயற்கை உபா தையை கழிக்காமல் வீட்டுக் குச் சென்று விடுகிறார்கள். பள்ளி நாட்களில் மாணவர்க ளின் நிலை மிகவும் வேதனை யாகி விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து  மாணவர்கள் பலி யான சம்பவத்தை தொ டர்ந்து, அனைத்து பள்ளி களில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளியின் அவல நிலையை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி, புதிய கட்டிடம் உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.