districts

img

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

சேதுபாவாசத்திரம், ஏப்.21-  

   தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டா ரங்களில் அரசு பள்ளி மாணவர் சேர்கைக் கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லி பட்டினம் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியை மாவட்ட  தொடக்க கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் தொடங்கி வைத்தார்.

    பேராவூரணி அருகே மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பேரணியை தலைமையாசிரியர் வை.கலைச்செல்வி தொடங்கி வைத்தார்.  

   இதோபோல், ஏனாதிகரம்பை அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி யில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பஞ்சதிபுரம், வீரராகவபுரம் ஆகிய இடங் களில் வீடு வீடாகச் சென்று உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தமிழரசன் தலைமையில் பெற்றோர்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.