தஞ்சாவூர், மே 18-
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மிகவும் பழமையான கட்டிடத்தில், உள்நோயாளி பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் அடுத்த கரந்தையைச் சேர்ந்த கார்த்திக், பாபநாசத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய இருவரும் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது. இதில் கார்த்திக் கையில் முறி வும், கார்த்திகேயன் முகத்திலும் தாடைப் பகுதியிலும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மருத்துவ மனை ஊழியர்கள், மீட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.