districts

மெலட்டூரில் அரசு மருத்துவமனை கட்டடம் திறப்பு

பாபநாசம், மே 17-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூ ரில் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலை யத்தில் வெளி நோயாளிகள் பிரிவு புதிய கட்டடத் திறப்பு  விழா நடைபெற்றது. மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச்  சுகாதார நிலையத்தில் ரூ 48 லலட்சம் மதிப்பிலான வெளி  நோயாளிகள் பிரிவு புதிய கட்டடத்தை  மருத்துவம் மற்றும்  மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்  திறந்து வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம்,  சட்டமன்ற உறுப்பினர்கள் திருவையாறு சந்திரசேகரன், பாபநாசம் ஜவாஹிருல்லா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதி கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

   தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன்  பாபநாசம் அரசு  மருத்துவமனையில் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்  போது மருத்துவர்கள் குமரவேல், நிர்மல் குமார், திருக்  குமரன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தன