பொன்னமராவதி, ஏப்.22 - சுதந்திர போராட்ட வீர ரின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு உதவி கிடைக்காத காரணத்தால், ஒன்றிய அரசு வழங்கிய தாமரைப்பட்டையத்தை வட்டாட்சியரிடம் திருப்பி ஒப்படைக்க வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி வேகுப் பட்டி ஊராட்சி பாண்டிமான் கோயில் வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது தந்தை பொசலாத்தேவர் சுதந்திர போராட்ட தியாகி ஆவார். பொசலாத்தேவர் கடந்த 15.4.1992 ஆம் ஆண்டு கால மானார். இந்நிலையில் சண்முகம், வீடின்றி வறுமை யில் வாழும் எனக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வாயிலாக காட்டுப்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் பொன்னமராவதி வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு தந்தை யின் தாமரைப்பட்டையத்தை திருப்பி ஒப்படைக்க வந்தவ ரிடம், மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் ஜெய பாரதி, இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக கூறி அனுப்பி வைத்தார்.