பாபநாசம், ஜூன் 19-
பாபநாசம் ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு, உதவிப் பெறும் உயர், நடு, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சியை பாபநாசம் வட்டாரக் கல்வி அலுவலர் மணி கண்டன், ஜெய மீனா ஆகியோர் தொடங்கி வைத்த னர். பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன் முன்னிலை வகித்தார்.
இதில் வளர் இளம் பருவ பிரச்சனைகள், உடல் நல கல்வி, மன்றச் செயல்பாடுகள், கலையரங்க நிகழ்வு தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது. ஆடுதுறை ஆசி ரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுபாஷ், பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வை யாளர் பொறுப்பு முருகன் உட்பட 245 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.