கரூர், ஏப்.29-
ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெற்ற 19-வது சீனியர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யா லயா மாணவி சுஷ்மிதா முருகேஷ் தமிழக அணியில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், சாதனை மாணவி சுஷ்மிதா முருகேஷ், பயிற்சியாளர் வினோத்குமார் ஆகியோருக்கு பள்ளி யில் பாராட்டு விழா நடைபெற்றது. விழா விற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் முன் னிலை வகித்தார். மாணவி சுஷ்மிதா முருகேஷ் மற்றும் பயிற்சியாளர் வினோத் குமார் ஆகியோரை பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல் வர் சி.ராமசுப்ரமணியன், பரணி வித்யா லயா முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா பாராட்டினர்.
மாணவி சுஷ்மிதா அண்மையில் குஜராத் மாநிலம் வாதோதராவில் நடை பெற்ற 36-வது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.