districts

img

மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்குக!

கும்பகோணம், பிப்.25- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்க திரு விடைமருதூர் தெற்கு ஒன்  றிய சிறப்பு பேரவை கூட்டம் நாச்சியார்கோவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றிய பொறுப்பாளர் பா.அனிதா தலைமை வகித்தார். எஸ். கஸ்தூரி, சூர்யா, ரஜபுனிஷா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செய லாளர் பி.எம்.இளங்கோவன் துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி, மாவட்ட துணை தலைவர் பழ. அன்பு மணி, மாவட்ட துணைச் செய லாளர் சரவணன், ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி உமா சங்கர், துணைத் தலை வர் பழனியம்மாள் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், ஒன்றியத் தலைவராக அனிதா, துணை தலைவர்களாக சூர்யா, ரஜ புனிஷா, செயலாளராக கே. பார்த்திபன், துணை செயலா ளர்களாக அன்சாரி, அனிதா, பொருளாளராக கஸ்தூரி உள்ளிட்ட 15 நபர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய் யப்பட்டது. கூட்டத்தில் திருவிடை மருதூர் ஒன்றியத்தில் மாற்  றுத்திறனாளிகளுக்கு அனை வருக்கும் கட்டாய 100 நாள் வேலை ஊனத்தின் தன் மைக்கேற்ப இலகுவாக வழங்கி அரசு நிர்ணயித்த முழு தொகையை வழங்க  வேண்டும், அரசு மருத்துவ மனையில் மாற்றுத்திறனாளி களுக்கு சாய் தளம் மற்றும்  லிப்ட் வசதி செய்து கொடுக்க வேண்டும், மாற்றுத்திற னாளிகள் அதிகமாக பயன்  படுத்தும் கும்பகோணம் தலைமை மருத்துவமனை யில் சிறப்பு மருத்துவர்கள் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.