விருதுநகர், மே.6-
விருதுநகரில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்து ள்ளது. இதனால், பொது மக்கள் பெரும் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.
விருதுநகர் காய்கறி சந்தையில் கடந்த வாரம் 1 கிலோ இஞ்சியின் விலை ரூ.120க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வாரம் கிலோ ஒன்றுக்கு ரூ.80 வரை அதிகரித்து தற்போது 1 கிலோ இஞ்சியின் விலை ரூ.200 ஆக உள்ளது. இதனால், பொது மக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.
பெரும்பாலான வீடுகளில் காலை வேளைகளில் தேநீர் தயார் செய்யும் போது தேநீருடன் இஞ்சியை சேர்ப்பது வழக்கம். இதனால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என பலர் தேநீருடன் இஞ்சியை சேர்த்து பருகி வருகின்றனர். ஆனால், தற்போது இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் கரு வேப்பிலை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.