districts

புதுக்கோடையில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 8-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்  டத்திலும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு ஜூன் 10 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி  வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னி லையில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடை பெற உள்ளது.  

    முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் கோரும் மனுக்  களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய  சேவைகள் குறித்த கோரிக்கையினை அளிக்கலாம்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்  பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும்  குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனி யார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை  குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாது காப்பு சட்டம் 2019 -இன் படி மேற்கொண்டு பயன்பெற லாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி வித்துள்ளார்.