districts

img

செரிமான மண்டல ரத்தக்குழாய் அடைப்பு மரணத்தின் விளிம்பில் இருந்த முதியவருக்கு மறுவாழ்வு அளித்த அப்போலோ மருத்துவர்கள்

திருச்சிராப்பள்ளி, அக்.9- திருச்சி அப்போலோ மருத்துவமனையில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது லேப்ராஸ் கோபி அறுவை சிகிச்சை நிபுணர் முகமதுமன்சூர், இதய நோய் மருத்துவர் சியாம் சுந்தர், குடலியல் நோய் மருத்துவர் முரளி ரங்கன், நுரையீரல் தமிழரசன், தீவிர சிகிச்சை மருத்துவர்கள் பரணி மற்றும் விக்னேஷ், மயக்கவியல் மருத்துவர்கள் கார்த்திக், அழகப்பன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  தஞ்சையை சேர்ந்த 62 வயது முதியவர் அடி வயிற்றில் கடுமையான வலியுடன் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோத னையில் செரிமான மண்டலத்தில் ரத்தம் செலுத்தும் தமனி ரத்தம் உறையும் சிக்கலான நிலை மற்றும் குடல்  ஒவ்வாமை என குறிக்கப்படும் குடலுக்கு ரத்தம் செல்வ தில் அடைப்பு ஏற்பட்டு குடல் தசைகள் சிதையும் ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பது தெரியவந்தது.  அத்துடன் அவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு இணை  நோய்கள் இருந்துள்ளன. அதற்கான மருந்துகளை அவர் தொடர்ந்து எடுக்காமல் அலட்சியமாக இருந்துள் ளார். உடலில் கடும் பிரச்சனைகளைக் கொண்டுள்ள இந்த நோயாளிக்கு மரணத்திற்கான வாய்ப்பு 90 சதவீத மாக இருந்தது. குடலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும்  முக்கியமான எஸ்எம்ஏ ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதும், குடல் தசைகள் சிதையும் நிலையும் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.  

சவாலான நிலையில், Jejunostomy மற்றும் laparotomy என்ற மிக முக்கியமான இரண்டு சிகிச்சை களை லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்  முகமது மன்சூர் மற்றும் வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் ஆகியோர் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். அதனைத் தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழமான பவுத்திர மூலத்தைச் சரி செய்வ தற்காக முக்கியமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  சுமார் 25 நாட்கள் தீவிர மருத்துவப் போராட்டத் திற்குப் பின்பு, தானே எழுந்து நிற்கும் அளவுக்கு உடல் நிலை தேறினார். இது திருச்சி அப்போலோ மருத்துவ மனை மருத்துவர்கள் செய்துள்ள பெரிய சாதனையா கும். மேலும் பிரத்யேக அவசர தொடர்பு எண் 1066 மூலமாக, எந்த அவசர சிகிச்சை தேவைக்கும் பொது மக்கள் அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது திருச்சி அப்போலோ மருத்துவ மனை மூத்த பொது மேலாளர் சாமுவேல் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி சிவம், பொதுமேலாளர் மணிகண்டன், துணை பொது மேலாளர் சங்கீத் ஆகி யோர் உடனிருந்தனர்.