கும்பகோணம், ஜூன் 20-
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில், 52 பேட்டரியில் இயங்கும் குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் சுபா திரு நாவுக்கரசு தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அரசு கொறடா கோவி.செழியன் ஆகியோர் பேட்டரியால் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களிடமும் வாகனங்களை ஒப்படைத்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.