கரூர், அக்.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய 7 ஆவது மாநாடு (தோழர் ஏ.ரெங்கராஜன் நினைவ ரங்கம்) கிருஷ்ணராயபுரத் தில் உள்ள ஸ்ரீஅம்மன் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் வழக்கறி ஞர் சரவணன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வி.நாகராஜன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஜீவானந்தம் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ மாநாட்டை நிறைவுரையாற்றினார். கிருஷ்ணராயபுரம் ஒன்றி யத்தின் புதிய செயலாளராக ஜி.தர்மலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீராக செல்லும் நீரை குழாய் மூலம் கரூர் மாவட்டத் தின் மிகப்பெரிய ஏரியாக உள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கும், கோவக்குளம் ஏரிக்கும் கொண்டு செல்ல வேண்டும். வேளாண் கல்லூரி அமைக் கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கிருஷ்ண ராயபுரம் ஒன்றியங்களில் நெல் கொள்முதல் நிலை யங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.