மயிலாடுதுறை, மே 15-
மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகம் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியளிப் பில் கம்பீரமாக கட்டப்பட்டு வருகிறது. மாவட்டம் முழு வதும் 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் ஒவ்வொரு கிராமங் களுக்கும் சென்று கட்டு மானப் பணிக்கான நிதியை சேகரித்து வருகின்றன.
தரங்கம்பாடி ஒன்றி யத்தில் ஒன்றியச் செயலா ளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், ஜி. வெண்ணிலா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் காபிரி யேல், அம்மையப்பன் ஆகி யோர் தலைமையிலான குழுக்கள், செம்பனார்கோ வில் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கண்ணகி, வீ.எம்.சர வணன் ஆகியோர் தலைமை யிலான குழுக்கள் மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளிலும் 20- க்கும் மேற்பட்ட குழுக் களாக உண்டியல் மூலம் நிதி சேகரித்து வருகின்ற னர்.
மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், ப.மாரி யப்பன்,சி.விஜயகாந்த், ஒன்றியச் செயலாளர்கள் டி.ஜி.ரவி, ஏ.ஆர்.விஜய் (மயிலாடுதுறை நகரச் செயலாளர்), அசோகன், கேசவன் ஆகியோர் நிதி சேர்ப்பு இயக்கத்தில் பங் கேற்று வருகின்றனர்.