மயிலாடுதுறை, ஆக.28 - மயிலாடுதுறை மாவட் டம் ஆக்கூர் கீழத்தெரு வைச் சேர்ந்தவர் சந்திரசே கர். இவரது மகள் சந்திரோ தயா நீட் தேர்வில் வெற்றி பெற்று, நீலகிரி அரசு மருத் துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆக்கூர் கிளையின் தலைவர் சொ.இராமமூர்த்தி, செயலா ளர் வாசுகி, மாவட்டக் குழு உறுப்பினர் சிவராமன், துணைத் தலைவர் சலாவு தீன், பாரதிதாசன் உள்ளிட் டோர் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரி வித்தனர். ஆக்கூர் அரசு பெண் கள் உயர்நிலைப் பள்ளி யில் 10 ஆம் வகுப்பு வரை படித்த சந்திரோதயா, திருக் கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்தவர். பள்ளி படிப்பு முழுவதையும் அரசுப் பள்ளி யில் படித்து, நீட் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.