கரூர் , ஆக. 22 கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், மாவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பட்டியில் பகுதி நேர ரேசன் கடையை சட்ட மன்ற உறுப்பினர் சிவ காமசுந்தரி திறந்து வைத்தார். மாவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கிறார்கள். இந்த கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட ரேசன் அட்டைகளை பொதுமக்கள் வைத்துள்ளனர். இவர்க ளுக்கு ரேசன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் சுமார் 3 கிலோ மீட்டர் தொ லைவில் உள்ள ரெட்டியப் பட்டிக்கு சென்று தான் வாங்கி வர வேண்டும். சின்னாம்பட்டியலிலிருந்து ரெட்டியபட்டிக்கு செல்வ தற்கு போதிய பேருந்து வச திகள் கிடையாது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் என அனைவரும் நடந்துதான் செல்ல வேண்டும். தங்களுக்கு சின்னாம்பட்டியிலேயே பகுதி நேர ரேசன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதாசெந்தில்மோகனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரியிடம் கோரிக்கை மனு வழங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னாம்பட்டி கிராம பொதுமக்களின் பகுதி நேர ரேசன் கடை கொண்டு வரு வதற்கு சட்ட மன்ற உறுப்பி னர் சிவகாமசுந்தரி, ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன், திமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி ஆகியோர் பெரும் முயற்சி எடுத்ததன் விளைவாக இந்த கோரிக்கை நிறை வேறியுள்ளது. திறப்பு விழா சின்னாம் பட்டியில் புதிய பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழாவிற்கு மாவத் தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய குழு உறுப் பினர் பி.ராமமூர்த்தி வர வேற்று பேசினார். கிருஷ்ண ராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார். திமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், மாவட்ட பிரதிநிதி செந்தில்மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூர் வட்டச் செயலாளர் பி.பழனிவேல், ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரபாகுமார், வார்டு உறுப்பினர் நாகமணி கந்தசாமி, ஊராட்சி செயலர் அன்பழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.