districts

img

முறைசாரா தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக! சிஐடியு மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 5 - கட்டுமானம், ஆட்டோ, தரைக் கடை, தையல், சுமைப்பணி, ஓட்டு நர்கள், முறைசாரா தொழிலா ளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். ஆன்-லைன் பதிவு குறைபாடுகளை சரி செய்து நேரடி பதிவை அனுமதிக்க வேண் டும். பணப்பயன்களை, ஓய்வூதி யத்தை தாமதிக்காமல் உடனுக்கு டன் வழங்க வேண்டும். பெண் களுக்கு 55 வயதில், ஆண்க ளுக்கு 60 வயதில் ரூ.3000 ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு அனைத்து தொழிற்சங்கம் சார்பில்  செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு திருச்சி மாநகர், புற நகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு ராமர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ரெங்கராஜன், சிவராஜ், செல்வி, மணிகண்டன், சந்திரசேகர், பூ மாலை, பிரமிளா, சந்திரன், சிவக் குமார், பன்னீர்செல்வம், சம்பத் ஆகியோர் பேசினர். 

புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலை வர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத் தில் மாநில துணைத் தலை வரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.கே.மகேந்தி ரன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு  மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர்,  பொருளாளர் எஸ்.பாலசுப்ரமணி யன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி. அன்புமணவாளன், அனைத்துப் போக்குவரத்து ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் கே.ரெத்தின வேல் மற்றும் நிர்வாகிகள் பேசி னர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இருந்து ரயிலடி வரை ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலா ளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முறைசாராத் தொழிலாளர்கள் சங்க பி.என்.பேர்நீதி ஆழ்வார் தலைமை வகித்தார். சுமைப் பணி சங்க  மாவட்டச் செயலாளர் த.முருகே சன், கட்டுமான சங்க மாவட்டச் செய லாளர் இ.டி.எஸ்.மூர்த்தி, கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் சுப்பு ராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.ஜெயபால் நிறைவுரையாற்றி னார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு சிஐடியு  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் சீனி.மணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.ரவீந்தி ரன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.ராமானுஜம், கட்டுமான சங்க  மாவட்ட செயலாளர் ப.மாரியப் பன், மாவட்ட தலைவர் என்.லெட்சு மணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

கரூர்
சிஐடியு கரூர் மாவட்டக்குழு சார்பில் வெண்ணமலையில் தொழிலாளர் நலவாரிய அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிஐடியு மாநி லத் தலைவர் ஆர்.சிங்காரவேலு கோரிக்கைகளை விளக்கி பேசி னார். மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜமுகமது, சாலை வியாபாரிகள் சங்க மாவட்ட  செயலாளர் எம்.தண்டபாணி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.ஹோச்சுமின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

அரியலூர்
சிஐடியு அரியலூர் மாவட்டக்  குழு சார்பில், மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு மாவட்டச் செய லாளர் துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட் டப் பொருளாளர் சிற்றம்பலம், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை தலை வர் சந்தானம் மற்றும் கட்டுமான சங்க தலைவர்கள் மெய்யப்பன், ஆதிலெட்சுமி, ஆரோக்கியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.