districts

தூத்துக்குடியிலிருந்து மதுரை, தஞ்சாவூர் வழியாக மும்பைக்கு சிறப்பு ரயில்

தஞ்சாவூர், மே 26-

    தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி சிறப்பு ரயில்  இயக்கப்படுகிறது. மும்பை-தூத்துக்குடிக்கு இடையே தஞ்சாவூர், கும்ப கோணம் வழியாக சிறப்பு ரயில்  இயக்கப்படுகிறது. இதற்கான அறி விப்பை ரயில்வே துறை வெளியிட்டது.  

    கோடைகால நெரிசலை சமாளிக்க சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரயில்  இரண்டு முறை மட்டும் இயங்கும்.

    இந்த சிறப்பு ரயில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி மும்பையில் பிற் பகல்1.15 மணிக்கு புறப்பட்டு, ரேணிகுண்டா (சனிக்கிழமை) காலை 8.05  மணி, திருத்தணி, காஞ்சீபுரம், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும்.

   தூத்துக்குடியில் வருகிற 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்குப் புறப்பட்டு, மதுரை, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், காஞ்சீபுரம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக மும்பைக்கு 29-ஆம் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.40 மணிக்கு சென்றடையும். பயணிகள் பயன் பாட்டைப் பொருத்து, இதன் இயக்கம் பின்னர் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.