தஞ்சாவூர், ஜூலை 18-
தஞ்சை மாவட்டத்தில் ஜூலை 25 அன்று முதல் எண்ணெய் பனைக்கன்று நடவு தொடங்கப்படுகிறது என தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சை மாவட்டத்தில், கடந்த ஆண்டு தேசிய சமையல் எண்ணெய்-எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 8 ஹெக்டேர் அளவில் புதிய பரப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதுபோன்று இந்த ஆண்டும் தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 20 ஹெக்டேர் அளவில் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலக்கினை 75 விழுக்காடு சாதனை அடையும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை யின் மூலம், தேசிய சமையல் எண்ணெய் பனை இயக்கம் திட்டத்தின் கீழ் மாபெரும் எண்ணெய் பனை கன்று நடவு விழா ஜூலை 25 அன்று முதல் ஆகஸ்ட் 25 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
எண்ணெய் பனை நடவு செய்ததில் இருந்து, மூன்று ஆண்டுகளில் மகசூல் தர வல்லது. எண்ணெய் பனை நடவு செய்வதற்கு களி கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதி மிக்க பகுதி ஏற்றதாகும். ஒரு ஹெக்டேருக்கு 20-இல் இருந்து 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகின்றன.
அவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ண யிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த வித சிரமமும் ஏற்படாது.
இதில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, வயல் வரை படம் மற்றும் ஆதார் நகல் ஆகிய ஆவ ணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித் தும் உழவன் செயலி மூலமும் பதிவு செய்ய லாம்.
மேலும் விவரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தஞ்சை, பூதலூர் - 9943422198, ஒரத்தநாடு, திருவோணம் - 9488945801, பட்டுக்கோட்டை, மதுக்கூர் - 6374921241, கும்பகோணம், திருவிடைமரு தூர், திருப்பனந்தாள் - 9842569664, பாப நாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு - 7539940657, பேராவூரணி, சேதுபாவா சத்திரம் - 8903431728 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.