மயிலாடுதுறை, ஜூன் 15-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஜூன் 19 அன்று பருத்தி ஏலம் தொடங்குகிறது என நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் செம்பனார்கோவில் வட்டாரத்தில் விவசாயி கள் தங்களது வயலில் பருத்தி சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது பருத்தி அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத் தில் ஜூன் 19 அன்று (திங்கட்கிழமை) தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் (இ-நாம் முறையில்) பருத்தி ஏலம் தொடங்குகிறது.
ஏலத்தில் தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்ப லூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த பருத்தி மில் அதிபர்கள் மற்றும் வணி கர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் விவசாயிகள் தங்களது பருத்தியை விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்து ஏலத்தில் கலந்துகொண்டு விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என அவர் கூறினார்.