திருச்சிராப்பள்ளி, மார்ச் 8 - திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 10 ஆம் தேதி இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியில் தரமான கறவை மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறை, முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், கன்று பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவனப் பொருட்கள் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு, நோய் தடுப்பு முறைகள் பற்றிய ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அளிக்கப்படும். கொ ரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். எனவே பங்குபெற விரும்புவோர் 0431 - 2331715 என்ற எண்ணில் முன்பதிவு செய்வது அவசியம் என திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.