இலவச கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர், ஆக.28 - தஞ்சாவூர் மாவட் டம், பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம், பெரு மகளூர் ஸ்ரீராம் மெடிக் கல், தஞ்சாவூர் மேக்ஸ் விஷன் கண் மருத்து வமனை ஆகியவை இணைந்து, பெருமக ளூர் பேரூராட்சி பணியா ளர்களுக்கான கண் பரி சோதனை மருத்துவ முகாமை பெருமகளூர் பேரூராட்சி அலுவல கத்தில் நடத்தினர். முகாமிற்கு, பெருமக ளூர் பேரூராட்சி பெருந் தலைவர் சுந்தரத்தமிழ் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பெருமக ளூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆதித்யன், பெருமகளூர் ஸ்ரீராம் மெடிக்கல் நிறுவனர் ராமச்சந்திரன், பேரா வூரணி ஸ்டார் லயன்ஸ் சங்க நிர்வாக அலுவலர் இராமநாதன், சாசன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மொத்தம் 147 நபர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஆக.28 - தஞ்சாவூர் விற்ப னைக்குழு, பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரிய மாலினி தலைமை வகித் தார். இதில் கும்பகோ ணம் மற்றும் அதைச் சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 790 விவசாயிகள் 95.200 மெ. டன் பருத்தி எடுத்து வந்த னர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 10 வணிகர்கள் அதிகபட்சம் குவிண்டா லுக்கு ரூ.7801, குறைந்த பட்சம் ரூ.7000, சராசரி ரூ.7500 என்ற விலையை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மதிப்பு ரூ.67 லட்சம்.
வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
கரூர், ஆக.28 - கரூர் மாவட்டம் கிருஷ் ணராயபுரம், உப்பிட மங்கலம், கோவக்குளம் மற்றும் சித்தலவாய் ஆகிய பகுதிகளில் பல் வேறு திட்டப் பணிகளை புதனன்று மாவட்ட ஆட்சி யர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் மக்களை தேடி மருத்து வம் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று உரிய நேரத்தில் மருந்து மாத்திரை சிகிச் சைகள் கிடைக்கிறதா என்பதையும், உப்பிட மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வரு வதை பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித் தும் கேட்டறிந்தார். பின்னர் கிருஷ்ண ராயபுரம் வட்டம் சித்தல வாய் ஊராட்சி எஸ். முனியனூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு முன்பருவ கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்தும், குழந்தை களுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொன்னமராவதி, ஆக.28 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலம்புரி வடுக நாதன் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட உரிமை யியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் ஸ்ரீநாத் தலைமை வகித்து, மாண வர்களிடம் சட்ட விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். காவல் ஆய்வாளர் பத்மா, வழக்கறிஞர் எஸ்.மகேந்திரன் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் உள்ளிட்டோர் பேசினர். மேலும், சட்டங்கள் விழிப்புணர்வு தொ டர்பாக, எப்போது வேண்டுமானா லும் ‘15100’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் கும்பகோணம் கல்லூரி மூடல் மாணவர் சங்கம் எதிர்ப்பு
கும்பகோணம், ஆக.28- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில், தமிழ் துறையில் பணியாற்றி வரும் பேரா சிரியை ஒருவர், மாணவர்கள் இடையே சாதிய வன்மத்துட னும் தரக்குறைவாகவும் பேசி வந்ததாக, கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் தன் எழுச்சியுடன் உள்ளிருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட பேரா சிரியை விசாரித்து, மாணவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தா மல், கல்லூரி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென கல்லூரி நிர்வாகம், “கல்லூரி யில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரி இயங்காது” என முதல்வர் தெரி வித்துள்ளார். இருப்பினும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சம்பந்தப் பட்ட பேராசிரியை-ஐ விசாரித்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணவும், உடனடியாக கல்லூரியை திறந்து மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேராசிரியர்கள் மாண வர்களுக்கு முன் உதாரணமாக செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் செய்யாமல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஒன்றிய அரசு நிதியை வழங்க வேண்டும்
திருச்சியில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பேட்டி திருச்சிராப்பள்ளி, ஆக.28 - திமுக-வின் மறைந்த எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு நடைபெற்ற அன்ன தானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்கீடு தொகை, 573 கோடி ரூபாயை இதுவரை விடுவிக்கவில்லை. இது குறித்து, முதல்வரும் அமெரிக்கா செல்வ தற்கு முன்பு ஒன்றிய அரசிடம் வலியுறுத் தினார். இதுகுறித்து நாடாளுமன்ற குழுத் தலை வர் கனிமொழி தலைமையில், தமிழக எம்.பி. ,க்கள் அனைவரும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்தோம். அப்போதும் இந்த கோரிக்கை குறித்து வலி யுறுத்தினோம். மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இதில் அரசி யல் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி னோம். ஆனால் அவர்கள் தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே இந்த பணத்தை வழங்க முடியும் என்று கூறு கிறார்கள். இதற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டுதான் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி திட்டம், 2018 ஆம் ஆண்டில் அமல்படுத்தப் பட்டு விட்டது. எனவே இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் உடனடியாக பணத்தை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். நிதியை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டு உள்ள நிதிச் சுமையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற் கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செல வினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழக அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் மகேஸ் பொய்யா மொழி கூறினார்.
நூறுநாள் பயனாளர் பட்டியல் சம்பளத்துடன் வெளியிடப்படும் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி
கும்பகோணம், ஆக.28- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் குண்டும் குழியுமாக விபத்துக்குள்ளான சாலைகளை சீரமைக்க வேண்டும். நூறு நாள் வேலையை அனைவருக்கும் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். கிராம சபை கூட்டங்களை வார்டு தோறும் நடத்த வேண்டும். நூறு நாள் வேலையில் 2022-23-24-25 ஆண்டுக்கான பயனாளர் பட்டியலை சம்பளத்துடன் வெளியிட வேண்டும். அதனை சமூக தணிக்கை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, கொத்தங்குடி ஊராட்சியில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் நாகமுத்து தலைமை யில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை யடுத்து கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுவாமிமலை காவல் ஆய்வாளர், வேளாண் விரிவாக்க அதிகாரி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர். அப்போது மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடவ டிக்கை எடுக்க அதிகாரிகளிடம் முறையிட்டனர். கோரிக்கையின் அடிப்படையில், நூறு நாள் வேலையை ஏ கிளிஸ்டர், பி கிலிஸ்டர் என இரண்டாகப் பிரித்து, தினமும் 100 பேருக்கு வேலை வழங்கு வது, சாலைகளை உடனடியாக சீரமைப்பது, நூறு நாள் பயனா ளர் பட்டியலை சம்பளத்துடன் சமூக தணிக்கை செய்து வெளியிடு வது என அதிகாரிகள் ஒப்புக்கொண்டு உறுதியளித்தனர். இதை யடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலா ளர் நாகராஜன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஐயப்பன், சுப்ரமணி யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூரில் இன்றும், நாளையும் பெண்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர், ஆக.28 - தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் பெண்களுக்காக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இவ்வலுவலக வளாகத்தி லேயே ஆக.29 (வியாழக்கிழமை), ஆக.30 (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் ஓசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 1500-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களுக்கு தகுதி யான பெண் பணியாளர்களை மட்டுமே தேர்வு செய்ய வுள்ளனர். முகாமில் 18 முதல் 21 வயதிற்குட்பட்ட 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்த பெண்கள் கலந்து கொள்ள லாம். இந்நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். மேலும், உணவு மற்றும் தங்குமிட வசதியும் ஏற்படுத்தி தரப்படும். முகாமில் கலந்து கொள்பவர்கள் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதரச் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்களுடன் தங்களின் சுயவிவர அறிக்கையுடன் (பயோ- டேட்டா ) கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய கால அவகாசம்
கரூர், ஆக.28 - முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லுரரி மாணவ -மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டு கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளன. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடை பெறும் இப்போட்டிகள், 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி, மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத் திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் நடத்தப்பட உள்ளன. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விளை யாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். (குறிப்பு - இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்திட வேண்டும். நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது). மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கை பேசி எண். 7401703493-ஐ தொடர்பு கொள்ளலாம். கரூர் மாவட்டத்திலுள்ள ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் முன்பதிவு செய்து பயனடையுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டையிலிருந்து கந்தர்வகோட்டைக்கு
பேருந்து வசதி செய்து தர கோரிக்கை
தஞ்சாவூர் ஆக.28 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வரை பேருந்து வசதி செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், “பட்டுக்கோட்டையில் இருந்து அலிவலம் - நடுவிக்கோட்டை - அதம்பை - அனந்த கோபாலபுரம் - புதுநகர்- வெட்டுவாக்கோட்டை - ஆத்துக்கரை வழியாக ஊரணிபுரம் சென்று அங்கிருந்து கந்தர்வகோட்டை வரை அரசுப் பேருந்து இயக்க வேண்டும். இப்பகுதியில் நிறைய கிராமங்கள் உள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்வதற்கு, திருவோணம் தாலுகா அலுவலகம் செல்வதற்கும், அவசரத் தேவைகளுக்காக மருத்துவமனைக்கு செல்லவும் மிகுந்த சிரமப்படுகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கினால் இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பொதுமக்கள் பயன்பெறுவர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. மனுவின் நகல் கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கும் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.