இலவச கண் சிகிச்சை முகாம்
பாபநாசம், அக்.15 - தஞ்சாவூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், கபிஸ்தலம் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யம், ஈச்சங்குடி காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் சதாப்தி மஹாலட்சுமி அம்மாள் டிரஸ்ட், அய்யம் பேட்டை டவுன் லயன்ஸ் கிளப் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரத்தில் நடத்தின. இதில் கபிஸ்தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவி யாளர் ரெங்கநாயகி 141 பேருக்கு கண் பரி சோதனை மேற்கொண்ட தில், 25 பேருக்கு கண்ணில் புரை முற்றிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற் கொள்ள தஞ்சாவூர் ராசா மிராசுதார் கண் மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார். முகாமில் மருத்துவர் தீபக், மண்டலத் தலை வர் குணா, அய்யம் பேட்டை டவுன் லயன்ஸ் கிளப் தலைவர் விஜய ராஜன், செயலர் சுரேஷ், பொருளாளர் முகமது இஸ்மாயில், நிர்வாக அலுவலர் தட்சிணா மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் புகார் குழு அமைக்க நடவடிக்கை
புதுக்கோட்டை, அக்.15 - பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் உள்ளூர் புகார் குழு அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபு ரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியா பார நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் பெண்க ளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013-ன் கீழ் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ளூர் புகார் குழு ஏற்ப டுத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் 4 உறுப்பி னர்களை கொண்ட குழுவில் அதிகபட்சமாக 3 பெண் உறுப் பினர்கள் இருக்க வேண்டும். இச்சட்டத்தின்கீழ் புகார் அளிக்க ஏதுவாக நிறுவனம் புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார் கள் பெறப்பட்டவுடன், உள்ளூர் புகார் குழு உறுப்பி னர்களை கொண்டு விசா ரணை மேற்கொள்ளப்படும். 10-க்கும் குறைவாக பணி யாளர்கள் அல்லது வீட்டு வேலை செய்பவர்கள் பாதிக்கப்பட்டால், அந்நபர் தனது முதலாளிக்கு எதிராக நேரடியாக மாவட்டங்களில் செயல்படும் புகார் குழுவில் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் புகார் குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் நடவடிக்கை குறித்து வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அறிக்கை யாக, ஒவ்வொரு நிறுவன மும் வருடாந்திர அறிக்கை யாக வழங்க வேண்டும். புகார் குழு அமைக்கப்படா மல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்ப டையில் நடவடிக்கை மேற் கொள்ளப்படாமல் இருந்தா லோ, சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும். இப்புகார் குழு ஏற்ப டுத்தாத நிறுவனங்களின் உரிமையாளர் ரூ.50,000 வரை அபராதம் செலுத்த நேரிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்பு றுத்தல்கள் தொடர்பாக புகார்களை www.she box.nic.in என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம் என தெரிவித்து உள்ளார்.
சிறந்த விவசாயிகளுக்கு விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டை, அக்.15 - அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவ சாயிகளுக்கான விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவிக்கையில், “அங்கக வேளாண்மை யில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டில் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாம் பரிசு ரூ.60,000, மூன்றாம் பரிசு ரூ.40,000 வழங்கப்படும். விண்ணப்பிக்கும் விவசாயிகள் தமிழ்நாட்டைச் சார்ந்த வராக இருக்க வேண்டும். சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப படிவம், துறை இணையதளம் www.tnhorti culture.tn.gov.in மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவ லகங்களில் கிடைக்கும். விவசாயிகள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவ லகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து மாவட்ட அளவிலான குழு ஒப்புதலுடன், மாவட்டத்திற்கு ஒரு விண்ணப்பத்தை தேர்வு செய்து, தோட்டக்கலை இயக்கு நர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவிலான குழு உறுப்பினர்கள் பரிசீலனை செய்து பரிசு வழங்க தேர்ந்தெடுக்கப்படுவர்” என்றார்.
அக்.19 பெரம்பலூரில் பொது விநியோக குறைதீர் முகாம்
பெரம்பலூர், அக்.15 - பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் அக்.19 அன்று நடைபெறவுள்ளது. பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கை களின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்ப லூர் வட்டம், களரம்பட்டி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ச.சுந்தரராமன் தலைமையில் நடைபெறுகிறது. வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிரா மத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வி.வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூர் கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், ஆதனூர் (தெற்கு) கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ. சுரேஷ்குமார் தலைமையிலும் அக்.19 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்த மான தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என ஆட்சி யர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள நிரந்தர செவிலியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
திருவாரூர், அக்.15 - தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக திங்கள்கிழமை மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி. அன்பரசி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி. வினோதா கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.செங்குட்டுவன், கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.விஜயன், கிராம சுகாதார செவிலி யர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் பி.பரமேஸ் வரி உள்ளிட்டோர் உரையாற்றினர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம் நிறைவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர் வட்டச் செயலா ளர் நா.தம்பித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். அமைப்பின் மாவட்ட பொருளாளர் ஆர்.பிரியதர்ஷினி நன்றி கூறினார். காலியாக உள்ள நிரந்தர செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பின்படி, பணியில் இணைந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு மற்றும் உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.18,000-ஐ அனைத்து செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆளுநரின் பதவிக் காலம் குறித்து ஒன்றிய அரசு முடிவு எடுக்கும்
புதுக்கோட்டை, அக்.15 - ஆளுநர் பதவிக்காலம் தொடர்பாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில், “பதவிக்காலம் முடிந்தாலும், ஒன்றிய அரசு திரும்ப அழைக்கும் வரை ஆளுநர் அவரது பொறுப்பில் தொடரலாம் என்பதன் அடிப்படையில் அவர் ஆளுநராகத் தொடர்கிறார். இது தொடர்பாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுநருடன் முரண் வேண்டாம் என முதல்வர் கூறியதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அவரிடம் அப்படி சொல்லியிருக்கலாம். சிறைக் கைதிகள் மன உளைச்சல் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசலாம் என்பது உள்ளிட்ட சலுகைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். கைதிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பாதுகாப்பான முறையில்தான் இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி தடுக்கும் பணியை அரசு தொடர்ந்து செய்கிறது” என்றார்.