புதுக்கோட்டை, நவ.8 - மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத சம்பளப் பாக்கி யினை வரும் தீபாவளிப் பண்டிகைக்குள் விடு வித்திட வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாநிலத் தலைவர் எம். சின்னதுரை வலியுறுத்தி உள்ளார். புதுக்கோட்டையில் பட்டியலின மக்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று நடை பெற்ற கையெழுத்து இயக்கத்தில் அவர் பேசுகையில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கூலி என்பது மிகவும் குறைவானது.ஆண்டுக்கு நூறுநாள் வேலை என்பது பல இடங்களில் வழங்கப்படுவதில்லை. கடந்த நான்கு மாதங்களாக விவ சாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் கடத்தி வரு கிறது. உடனடியாக ஒன்றிய அரசு நிதியை விடுவிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னதுரை ஆகியோர் சார்பில் முதலமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாநிலத் தலைவர் எம்.சின்ன துரை எம்எல்ஏ, அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், பொருளாளர் பழநிசாமி, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் ஊரக வளர்ச்சித்துறை செயலாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலி யுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயத் தொழிலா ளர்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார். தொ டர்ந்து ஊரக வளர்ச்சித்துறை செய லாளர் செந்தில்குமாரைத் தொலை பேசியில் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டபோது, விரைவில் நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை விவசாயத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. வரும் தீபா வளிப் பண்டிகைக்கு முன்பாக ஒன்றிய அரசு நிதி பாக்கியினை விடு விக்க வேண்டும். மாநில அரசும் அதற் கான அழுத்தத்தைக் கொடுக்க வேண் டும் என்றார்.