districts

போலி ஆவணம் தயாரித்து 52 சென்ட் மோசடி

திருச்சிராப்பள்ளி, ஏப்.4- திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் அருகே  போலி ஆவணம் தயாரித்து 52 சென்ட் நிலத்தை அபகரித்ததாக நான்கு பேர் மீது  திருச்சிராப்பள்ளி புறநகர் காவல் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப் படுவதாவது:- வராகனேரியைச் சேர்ந்தவர்  டி.பன்னீர்செல்வம் (65). இவருக்கு திரு வெறும்பூர் அருகே உள்ள ஏலக்குடியில் 52  சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலம் 1985-ஆம்  ஆண்டு அவரது பெயரில் பதிவு செய்யப் பட்டது. 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி. பன்னீர்செல்வம் தனது நிலத்தைப் பார்வை யிடச்  சென்றபோது, அவருக்குத் தெரியாமல்  அடையாளம் தெரியாத நபர்கள் அதைச் சுற்றி வேலி அமைத்திருப்பதைக் பார்த்து உள்ளார். மேலும் அந்த நிலம் திருச்சிராப் பள்ளி பெரியகாளியம்மாள் தெருவை சேர்ந்த ஏ.பிராடி (56) என்பவருக்குச் சொந்த மானது என பலகையையும் வைத்துள்ள னர். இதையடுத்து பன்னீர்செல்வம், திரு வெறும்பூரில் உள்ள பத்திரப் பதிவு அலு வலகத்தில் உரிய சான்றானவங்களுடன் சென்று விசாரித்தபோது, அவர் பெயரில்  போலி ஆதார் அட்டை உருவாக்கப்பட்டிருப் பது தெரியவந்தது. இவரை ஆள்மாறாட்டம்  செய்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நில ஆவணம் தொலைந்துவிட்டதாக கூறி, நிலத்தின் உரிமையை மாற்றி, பிராடியின் பெயரில் பதிவு செய்துள்ளார். பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல் வேறு பிரிவுகளின் கீழ், பிராடி மற்றும் அடை யாளம் தெரியாத நபர்கள் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலிப் பதிவுக்கு உதவி செய்த டி.பிரகாஷ், (42) எஸ்.சுப்பு லட்சுமி (51) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு  செய்யப்பட்டது என்றனர்.