தஞ்சாவூர், ஜூன் 17-
பட்டுக்கோட்டை நகராட்சியில், ரூ.20 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற் காக சனிக்கிழமை அடிக்கல் நாட்டப் பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை நகரில், தற்போது உள்ள பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இத னால் அதிகமான பேருந்துகள் நகர்ப்பகுதிக்குள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகராட்சி எல்லைக்குட் பட்ட வார்டு எண்.1 நரியம்பாளையம் பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதியோடு, பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. கா. அண்ணாதுரை, பேராவூரணி எம்.எல்.ஏ., அசோக்குமார், திருவை யாறு எம்.எல்.ஏ., துரை.சந்திரசேக ரன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா, நகராட்சி மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணை யர் (பொ) குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
பேருந்து நிலையத்தில், 50 பேருந்துகள் நிறுத்துமிடம், 120 கடை கள், 2 உணவகம், 4 கழிப்பிடம், இரண்டு இருசக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம் நிறுத்து மிடம், பொருள் பாதுகாப்பு அறை ஒன்று, ஒரு முன்பதிவு அலுவலகம், மூன்று காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி யுடன் அமைக்கப்பட உள்ளது.
தமுஎகச கோரிக்கை
இதனிடையே, தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்க மாவட்டக் குழு கூட்டத் தில், பட்டுக்கோட்டையில் புதிதாக அடிக்கல் நாட்டப்படும் பேருந்து நிலையத்திற்கு, மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரத்தின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.