districts

வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூர், ஆக.1 -

    அரியலூர் ஒன்றியம், உசேனாபாத் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ்  ரூ.3.84 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால்  அமைத்தல், ரூ.3.02 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைத்தல், ரூ.4.78 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் மற்றும் மணல் வடிகட்டி உறிஞ்சுக்குழி (140 மீ) அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து அவர், மோரக்குழி, நுரையூர், அயன்ஆத்தூர், பூமுடையான்பட்டி, இலுப்பையூர், பொய்யாதநல்லூர், தாமரைக்குளம், வெங்கட்ராமபுரம், தவுத்தாய்க்குளம், அம்மாக்குளம், வாலாஜாநகரம், பெரியநாகலூர் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.7.67 கோடி மதிப்பீட்டில் 33 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேற்கண்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார்.