பாபநாசம், மே 28-
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்ட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலகர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.